தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கிருமி படத்தில் இரவு நேர சென்னையை நேர்த்தியாக காட்டியவர் ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட். பி.சி.ஸ்ரீராமின் மாணவர். ரேடியோ ஜாக்கியா இருந்து ஒளிப்பதிவாளராகியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
கல்லூரியில் படிக்கும்போதே இயக்குனராக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. சில விளம்பர கம்பெனிகளில் வேலை பார்த்தேன். அதன்பிறகு ஆல் இந்தியா ரேடியோவுக்கு ஆள் எடுத்தார்கள் போய் நின்றேன். ரேடியோ ஜாக்கி வேலை கிடைத்து. பத்துக்கு பத்து அறைக்குள் என்னதான் பேசிக் கொண்டிருந்தாலும் முகம் வெளியில தெரியாது என்பதால் நண்பர்கள் உதவியுடன் பி.சி.ஸ்ரீராம் சார்கிட்ட சேர்ந்தேன். அவர்தான் "நான் பெரிய இயக்குனர் கிடையாது பேசாம கேமரா கத்துக்கிட்டு ஒளிப்பதிவாளராகிடு"ன்னு சொன்னார். அதை ஏத்துக்கிட்டேன். சின்சியராக கத்துக்கிட்டேன். ஐ படத்துல சில காட்சிகளை என்னை எடுக்க விட்டார். இது நம்ம ஆளு படத்துல பணியாற்றி கேமராமேனுக்கும் இயக்குனருக்கும் பிரச்சினை வர கேமராமேன் விலகிவிட்டார். என்னை கூப்பிட்டாங்க நான்தான் படத்தை முடிச்சு கொடுத்தேன்.
அடுத்துதான் கிருமி வாய்ப்பு. இரவு நேர கதை ஒளிப்பதிவுக்கு நிறைய வேலை இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு விரும்பி பண்ணினேன். இப்போது எல்லோரும் பாராட்டுறாங்க. நிறைய வாய்புகளும் வருகிறது. தயாரிப்பாளரின் இயக்குனர் மாதிரி, இயக்குனரின் ஒளிப்பதிவாளரா இருக்கணும்னு விரும்புறேன். என்கிறார் அருள் வின்செண்ட்.