இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஐயா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா இதுவரை எத்தனையோ படங்களில் நடித்துவிட்டார். அத்தனை படங்களிலும் இரவல் குரல்தான். டிவி நடிகையான தீபாவெங்கட்தான் நயன்தாராவுக்காக பின்னணி குரல் கொடுத்து வருகிறார். நயன்தாராவுக்கு தமிழ் நன்றாகப் பேசத் தெரியும். அப்படியும் அவரை யாரும் சொந்தமாக டப்பிங் பேச அழைக்கவில்லையா அல்லது அழைத்து நயன்தாரா மறுத்துவிட்டாரா என்று தெரியவில்லை.
ஆனால் தன் புதிய காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் நானும் ரௌடிதான் படத்தில் முதன்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். 'மாயா'வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவிருப்பது 'நானும் ரௌடிதான்' படம்தான்.
'நானும் ரௌடிதான்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், ''முதன்முறையாக நயன்தாரா தன் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார், அவரது இந்த முயற்சிக்கு நன்றி என்று நயன்தாராவுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 21 அன்று ரிலீசாகிறது.