அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில், தயாரிப்பாளர் சங்கம் சார்பில், அதன் தலைவர் தாணு தலையிட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது; தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர். இருதரப்பினருக்கும் இடையே, சமரசம் ஏற்படுத்த, சினிமா தயாரிப்பாளர் தாணு, சமீபத்தில் முயற்சி செய்தார்; பலன் கிட்டவில்லை. அதேநேரத்தில், சரத்குமார் அணிக்கு ஆதரவாக, தாணு செயல்பட்டதை தயாரிப்பாளர்கள் குறைகூற துவங்கி விட்டனர். சிலர், விஷாலை தொடர்பு கொண்டு, தாணு சொல்கிறார் என, எதையும் நீங்கள் கேட்க வேண்டாம்; அவர் எடுத்த முடிவு, ஒட்டுமொத்த தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு இல்லை; தாணு எடுத்த முடிவில், எங்களுக்கு உடன்பாடில்லை என, தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, சரத்குமாருக்கு ஆதரவாக, சமரச பேச்சு என்ற பெயரில், நடிகர் சங்க தேர்தலை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்; இது, அவரது தனிப்பட்ட முடிவு. போட்டியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என, விஷால் கூறிவிட்டார். எனவே, தாணுவின் முயற்சி தேவையில்லாதது; முறையற்றது.
பொதுவாக, ஒரு சங்க தேர்தலில், இன்னொரு சங்கம் தலையிடக் கூடாது என்பது விதி. சினிமாவில், 23 சங்கங்கள் உள்ளன. மற்ற சங்கங்கள் எந்த குறுக்கீடுமின்றி, சுதந்திரமாக தேர்தலை நடத்துகின்றன. தயாரிப்பாளர் சங்க தேர்தலில், தாணுவுக்கு தனிப்பட்ட முறையில் தான், சரத்குமார் ஆதரவு கொடுத்தார். அதேபோல, தாணுவும் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிக்கட்டும். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது. இதில், தயாரிப்பாளர்களுக்கு உடன்பாடு கிடையாது.
சங்கத்தின் செயற்குழுவை கூட்டாமல், தாணு முடிவு எடுத்தது, தவறான அணுகுமுறை. இது, தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இடையேயான நல்லுறவை கெடுக்கும்; கசப்பான பின்விளைவுகளை ஏற்படுத்தும். தயாரிப்பாளர்களுக்கு எல்லா நடிகர்களும் தேவை; அவர்களை பிளவுப்படுத்தக் கூடாது.
நடிகர் விஷாலின், பாயும் புலி மற்றும் நடிகர் அருண்பாண்டியன் தயாரித்த, சவாலே சமாளி படங்கள், குறிப்பிட்ட நாளில் வெளியாகாது என, தாணு அறிவித்தார்; பிரச்னை ஏற்பட்டதும், முடிவை மாற்றினார்.நடிகர் சங்க தேர்தலில், யார் வெற்றி பெற்றாலும் மாலை போட்டு வரவேற்போம்.
இவ்வாறு ஏ.எல்.அழகப்பன் கூறினார்.