ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரண்மனை படத்தை அடுத்து ஸ்ரீகாந்துடன் நடித்து வரும் செளகார் பேட்டை படத்தை பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ராய் லட்சுமி, அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அடுத்தடுத்து சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கமிட்டானார். குறிப்பாக, சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே இந்தி சினிமாவில் கோலேச்ச வேண்டும் என்பதுதான் ராய் லட்சுமியின் பெருங்கனவாக இருந்தது வந்தது. அதனால் இந்தியில் அகிரா, ஜூலி-2 என்ற இரண்டு படங்களும் ஒரேநேரத்தில் கமிட்டானபோது உற்சாகமாகி விட்டார். அதோடு, இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் அசினுக்கு கொடுத்த என்ட்ரி போன்று அவர் தனக்கு அகிரா படத்தில் கொடுத்துள்ள பாலிவுட் என்ட்ரியும் தன்னை அங்கு பிரபல நடிகையாக்கி விடும் என்று எதிர்பார்க்கிறார் ராய் லட்சுமி.
அதனால், கைவசம் தமிழ், தெலுங்கு படங்கள் இருந்தபோதும் அவற்றை பெரிதாக நினைக்காமல், மும்பையில் முகாமிட்டுள்ளார் ராய்லட்சுமி. அதோடு, ஜூலி-2 என்ற இந்தி படத்தில் பாலிவுட் கவர்ச்சி புயல்களுக்கு இணையான கவர்ச்சியை வெளிப்படுத்தும் அவர், ஒரு காட்சியில் நீச்சல் உடையணிந்தும் கலக்குகிறாராம். அதனால் இந்த படம் தனக்கு இந்தி சினிமாவில் எனக்கு பெரிய இடத்தை பிடித்துத்தரப்போவது நிச்சயம் என்று கூறிவரும் ராய்லட்சுமி, மும்பையில் இருந்தபடியே புதிய படங்களை கைப்பற்றும் முயற்சிகளையும் முடுக்கி விட்டிருக்கிறார்.