தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், சரத்குமார் அணியும், விஷால் அணியும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தான் ஊழல் செய்திருப்பதாக பொய்யான பிரச்சாரம் செய்து ஆதாரமில்லாத அவதூறுகளை நடிகர் விஷால் பரப்பி விட்டு வருவதாக அவர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு கிரிமினல் வழக்குத் தொடர்ந்துள்ளார் சரத்குமார்.
இந்த கிரிமினல் வழக்கு குறித்து விஷால் பதிலளிக்கையில், நடிகர் சங்க கட்டிடம் அதில் உறுப்பினர்களாக இருப்பவர்களிடம் அனுமதி கேட்காமலேயே இடிக்கப்பட்டுள்ளது. அதோடு சில வருடங்களாக வருமான வரியே கட்டவில்லை. இதுபோன்ற பல குற்றங்கள் நடந்துள்ளது. இப்போது அவர் மீது நான்அவதூறு பரப்புவதாக என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆனால் அடுத்து இந்த குற்றங்களை நிரூபிப்பதற்காக அவர் மீது நான் வழக்குத் தொடரப்போகிறேன் என்று கூறியுள்ளார் விஷால்.
ஆக, நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அடுத்தபடியாக வழக்கு, நீதிமன்றம் என இன்னொரு பரபரப்பையும் சரத்குமார், விஷால் அணியினர் ஆரம்பித்துள்ளனர். இந்த பிரச்சினைகள் எப்போது முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.