‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
புதிய தலைமுறை சேனலின் நட்சத்திர செய்தி வாசிப்பாளரான சரண்யாவுக்கு சமீபத்தில் லண்டனில் பணியாற்றும் அமுதனுடன் திருமணம் நடந்தது. விரைவில் அவர் தன் கணவருடன் லண்டனில் செட்டிலாகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
என் கணவர் அமுதன் லண்டனில் பெரிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மனநலம் குறித்த பயிற்சி அளித்து வருகிறார். தியானக் கலையிலும் வல்லவர். திருமணம் முடிந்ததும், தற்போதுதான் தேனிலவு பயணங்களை முடித்து திரும்பியிருக்கிறோம். அடுத்து கணவருடனேயே லண்டனில் செட்டிலாகிறேன். புதிய தலைமுறையில் இனி செய்தி வாசிக்கும் வாய்ப்பு இல்லை. என்றாலும் தொடர்ந்து சேனலுடன் தொடர்பில் இருப்பேன். லண்டனில் இருந்தபடியே எனது பங்களிப்பை செய்வேன். டிசம்பர் இசை கச்சேரி முற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இந்தியா வருவோம் என்கிறார் சரண்யா.