தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்துள்ள சிங் இஸ் பிலிங் படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றுள்ளது. இது வரை 68 கோடி ரூபாயை வசூலித்துள்ள இந்த படம், தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த படத்தின் வெற்றி, படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி யார்தியை சிங் இஸ் பிலிங் படத்தின் அடுத்த பாகத்தை தயாரிப்பது பற்றி சிந்திக்க வைத்துள்ளது.
இது பற்றி அஸ்வினி யார்தி கூறுகையில், சிங் இஸ் பிலிங் படத்தில் ரப்தார் சிங்கின் கேரக்டர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தின் தொடர்ச்சியை எடுக்க நினைத்துள்ளேன். இதற்காக நல்ல கதை மற்றும் கேரக்டர்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கி உள்ளோம் என்றார். ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள சிங் இஸ் பிலிங் படத்தில் அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன், கே கே மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். பிரபுதேவா இயக்கியிருந்தார்.