பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. திருமணத்திற்கு பிறகும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வரும் அவர், அரசியலிலும் பிரவேசித்து வந்தார். தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அந்தவகையில், அடிக்கடி அரசியல் பரபரப்பிலும் சிக்கிக்கொண்டு வருகிறார் ரோஜா.
இந்தநிலையில், ப்ரியம், பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கெளரி, தேடினேன் வந்தது. புதுக்குடித்தனம் என பல படங்களில் நடித்த மந்த்ரா, பின்னர் ஒரு உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று தனது சொந்த ஊரான ஆந்திராவில் குடியேறினார். திருமணத்திற்கு பிறகு தமிழில் ஒன்பதுல குரு என்ற படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்த மந்த்ராவுக்கும் இப்போது அரசியல் ஆசை துளிர் விட்டுள்ளதாம்.
விளைவு, தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆசீர்வாதம் பெற செல்லும் மந்த்ரா, இந்த முறை சென்றபோது தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதையடுத்து விரைவில் அவரை கட்சியில் முறைப்படி சேர்த்துக்கொள்ளும் வேலைகள் நடக்கிறதாம். இதனால் இதுவரை ஒய்எஸ்ஆர் காங்கிரசில் ரோஜா என்ற நடிகை மட்டுமே இருந்தநிலையில், இப்போது புதிதாக மந்த்ராவும் என்ட்ரி கொடுக்கயிருப்பதால் இவருக்கு கட்சியில் மவுசு கூடியுள்ளதாம். இதையடுத்து ரோஜாவின் ஆதரவாளர்கள் மந்த்ராவின் வரவை எதிர்க்கத் தொடங்கியிருப்பதால், மேற்படி நடிகைகளால் உட்கட்சி பூசல் ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறதாம்.