விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
சற்குணம் இயக்கத்தில் விமல்-ஓவியா நடித்த படம் களவாணி. இந்த படத்தில் விமலின் தங்கையாக நடித்திருந்தவர் மனீஷா. அதன்பிறகு ரகளைபுரம் படத்தில் கருணாசின் தங்கையாக நடித்த இவர், பின்னர் மறுமுனை படத்திலும் நடித்தார். தற்போது சக்கரவர்த்தி இயக்கும் ரயில் நகர் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் தங்கையாக நடித்து கதாநாயகியாக முன்னேறி விட்டபோதும், படிப்பை விடவில்லை மனீஷா. தற்போது சென்னையிலுள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே நான்காவது வகுப்பு படித்தபோது தமிழ்ப்பாடத்தில் தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக கோல்டு மெடல் வாங்கிய இவருக்கு தற்போது இன்னொரு கோல்டு மெடல் வழங்கவும் அறிவிக்கப்பட்டிருக்கிறதாம்.
இதுபற்றி நடிகை மனீஷா கூறுகையில், எனக்கு சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருப்பதுபோல், பெரிய அளவில் படித்து ஐஏஎஸ் ஆக வேண்டும் என்கிற ஆசையும் உள்ளது. அதனால்தான் சினிமாவில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் மனசுக்குப் பிடித்த ஓரிரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். மேலும், நான்காவது படித்தபோதே நான் கோல்டு மெடல் வாங்கியிருக்கிறேன். இப்போது எஸ்ஆர்எம் கல்லூரியில் ப்ரீ மெரிட் அட்மிஷனில் விஸ்காம் படித்துக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில், தமிழில் தேசிய அளவில் 95 சதவிகிதம் மதிப்பெண் பெற்றேன். அதையடுத்து எனக்கு கோல்டு வழங்கப்பட இருப்பதாக கல்லூரியில் தெரிவித்துள்ளனர்.
இப்படி படிப்பில் எனக்கு கோல்டு மெடல் கிடைத்தபோதும், சினிமாவில் விஜய்யுடன் ஒரு படத்திலேனும் டூயட் பாட வேண்டும் என்பதுவும் என பெரிய கனவாக உள்ளது. அதனால்தான் படித்துக்கொண்டே சினிமாவை விடாமல் இருக்கிறேன் என்கிறார் மனீஷா.