‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சின்னத்திரை வட்டராத்தில் நன்கு அறிமுமான பெயர் வாய்ஸ் கோபி. ஆனால் ரசிகர்களுக்கு அவர் முகத்தை தெரியாது. குரலைத் தெரியும். "திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு உங்கள் விஜய் டி.வியல் தெய்வம் தந்த வீடு காணத்தவறாதீர்கள்" என்பது போன்ற பின்னணி குரலுக்கு சொந்தக்காரர்தான் இந்த வாய்ஸ்கோபி. தற்போது மகராபாரத்தில் சகுனி பேசும் "அன்பு மருமகனே..." என ஒலிக்கும் குரலும் அவருடையதுதான்.
இதுவரை பின்னணியில் இருந்து குரல்கொடுத்து வந்த கோபியை விஜய் டி.வி.முன்னணிக்கு கொண்டு வந்திருக்கிறது. சமீபத்தில் நடந்த விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் சிறந்த பின்னணி குரலுக்கான விருதை அவருக்கு வழங்கி கவுரவித்திருக்கிறது. விருது பட்டியலில் அவர் பெயர் இல்லை. ஆனால் நேயர்கள் பலர் அந்த குரல் யாருடையது அவருக்கும் ஒரு விருது கொடுங்கள் என்று போனிலும், கடிதம் மூலமாமாக கேட்டுக் கொண்டதுக்கிணங்க வாய்ஸ் ஆஃப் விஜய் டி.வி. விருது கோபிக்கு வழங்கப்பட்டது.
விருது பெற்றது பற்றி கோபி கூறியதாவது: நீயா நானா கோபியை எல்லோருக்கும் தெரியாது. என்னை யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு விருது வாங்கி என் முகத்தை காட்ட 13 வருடங்கள் உழைத்திருக்கிறேன். என்றார். இப்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் கோபிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.