நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் |
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகாராஷ்டிர மாநிலத்தின் புலி தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி மும்பை நகரின் நடுவில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய பூங்காவில் நடந்த விழாவில் கலந்து கொள்ள வந்தார் அமிதாப் பச்சன். விழா முடிந்ததும் தனி ஜீப்பில் பூங்காவை சுற்றிப் பார்தார். புலிகள் உலவும் பகுதிக்கு சென்ற அவர் அங்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித்திரிந்த புலிகளை கண்டு ரசித்தார்.
அப்போது ஒரு புலி அமிதாப் இருந்த ஜீப்பின் அருகே வந்தது. இதனால் பயந்து போன டிரைவர் ஜீப்பை வேகமாக செலுத்த முயன்றார். அப்போது அமிதாப் "மெதுவாக செல்லுங்கள் அது நம்மை ஒன்றும் செய்யாது" என்று கூறினார். ஜீப் மெதுவாக செல்ல சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை அமிதாப் ஜீப்பை துரத்திக் கொண்டே வந்தது. புலி உலவிடம் எல்லை வந்ததும் அப்படியே எல்லையில் நின்று விட்டது.
இந்த நிகழ்ச்சியையும் அப்போது எடுக்கப்பட்ட படங்களையும் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அமிதாப் இதுபற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார். "மும்பை தேசிய வனப்பூங்காவை நாங்கள சுற்றிபார்த்தபோது ஒரு புலி 4 கிலோ மீட்டர் தூரம் வரை எங்களை பின் தொடர்ந்து வந்தது என்பதை உங்களால் நம்பக்கூட முடியாது. பொதுவாக புலிகள் இப்படி யாரையும் பின்தொடர்வதில்லை. இது அபூர்வ நிகழ்வு. படப்பிடிப்புக்காக அடிக்கடி இந்த பூங்காவுக்கு நான் வந்திருந்தாலும் இந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது" என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.