ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கத்தி' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் எந்த படத்தையும் இயக்காத ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ஹிந்தியில் 'அகிரா' படத்தை முடிக்க உள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் தமிழில் யாருடன் இணையப் போகிறார் என்ற ஆர்வம் திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் ஏற்பட்டது. ஆனால், அடுத்த படத்தையும் முருகதாஸ் தமிழில் இயக்கப் போவதில்லை என்றே தெரிகிறது. ஏற்கெனவே, பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளருக்கு ஒரு படம் இயக்க கால்ஷீட் கொடுத்திருந்தாராம். அதோடு மகேஷ் பாபு வேறொரு தயாரிப்பாளருக்கு நடிப்பதற்காக கால்ஷீட் கொடுத்திருந்தாராம்.
அதனால், அந்த இரண்டு தயாரிப்பாளர்களும் இணைந்து, முருகதாஸையும், மகேஷ் பாபுவையும் இணைத்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கப் போவதாக டோலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் தயாரிக்கின்றன. அனேகமாக அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. மகேஷ் பாபு தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி வரும 'பிரம்மோற்சவம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பார் எனத் தெரிகிறது. மகேஷ் பாபுவுக்கு தமிழும் சரளமாப் பேச வரும் என்பதால் இந்தப் படத்தை இரண்டு மொழிகளிலுமே உருவாக்கலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம். முருகதாஸுக்கும் தமிழில் இடைவெளி இல்லாமலும் இருக்கும்.
ஆனால், அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கலாம் என்று காத்துக் கிடந்த முன்னணி நடிகர்களுக்குத்தான் ஏமாற்றமாகப் போய்விடும்.