டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உலக அழகியான ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர். குழந்தை பிறப்பால் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் இப்போது மீண்டும் ஜாஸ்பா படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். ''ஜாஸ்பா'' அக்., 9ம் தேதி வெளியாக இருக்கிறது. சினிமாவில் ரீ-என்ட்ரியான மற்றும் ஜாஸ்பா பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ....
சில ஆண்டுகள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆன அனுபவம் பற்றி சொல்லுங்க...?
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதை நான் எனது ரீ-என்ட்ரியாக கருதவில்லை, ஏனென்றால் சினிமாவை விட்டு நான் ஒருபோதும் விலகியது கிடையாது. இந்த ஐந்தாண்டுகளில் நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை, அதேசமயம் இந்த இடைப்பட்ட காலத்தில் விளம்பரங்கள், பொது நிகழ்ச்சிகள் என்று சினிமாவில் ஏதாவது ஒன்றில் நான் தொடர்பு உடன் இருந்தேன். சினிமாவை விட்டு நான் ஒருபோதும் விலகமாட்டேன். நான் 6 மாதம் கர்ப்பமாக இருந்தபோது கூட வேலை பார்த்து கொண்டிருந்தேன். எல்லா நேரமும் நான் பிஸியாகத் தான் இருந்தேன், ஓய்வே எடுத்தது கிடையாது.
தனிப்பட்ட வாழ்க்கை - சினிமா வாழ்க்கை எப்படி எதிர்கொள்கிறீர்கள்.?
எனது சொந்த வாழ்க்கையில் நான் அம்மா எனும் ஸ்தானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அதேசமயம் சினிமாவிலும் பயணித்து இரண்டிலும் சரிசமமாக எடுத்து கொள்கிறேன். என் குழந்தையை விட்டு நான் செல்லும் போது அவள், அம்மா எங்கே போகிறாய் என்று கேட்பார், அவளிடத்தில் நான் சினிமா ஷூட்டிங் செல்கிறேன் என்று சொல்ல முடியாது, சொன்னாலும் அவளுக்கு புரியாது, ஆகையால் வேலைக்கு போகிறேன் என்று சொல்வேன். முன்பு விளம்பர படங்களில் நடிக்கும் போது ஆராதாயாவையும் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து செல்வேன், அவளை விட்டு ஒருபோதும் பிரிந்தது கிடையாது.
ஜாஸ்பா படத்தை நீங்கள் தேர்வு செய்ய என்ன காரணம்.?
கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் எனது தாய்மையை மகிழ்ச்சியாய் ரசித்து வந்தேன். இந்த ஐந்தாண்டுகளில் நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன், ஆனால் ஜாஸ்பா படத்தின் கதை தான் வித்தியாசமாகவும், புதிதாகவும் இருந்தது. மேலும் படத்தின் இயக்குநர் சஞ்சய் குப்தா பிரபல இயக்குநரும் கூட... அதோடு மட்டுமில்லை இந்தப்படத்தில் ஷபானா ஆஸ்மி, இர்பான் கான் போன்றவர்கள் எல்லாம் நடிப்பதால், இந்த கூட்டணி வெற்றி பெறும் என்று எண்ணினேன். ஆகையால் இந்தப்படத்தை தேர்வு செய்தேன்.
இந்த ஐந்தாண்டுகளில் படப்பிடிப்புகளில் ஏதேனும் மாற்றத்தை உணர்த்தீர்களா.?
ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் இருக்கும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான அனுவபத்தையும், வித்தியாசத்தையும் கொடுக்கும். எனக்கு அந்தமாதிரி பெரிய மாற்றமும் எதுவும் தோன்றவில்லை. அதேசமயம் எனது முந்தைய படங்களை காட்டிலும் ஜாஸ்பா படம் முற்றிலும் வித்தியாசமானது.
ஜாஸ்பா படம் பற்றி சொல்லுங்க...?
இந்தப்படத்தில் நான் ஒரு வக்கீலாக நடிக்கிறேன். குற்றவாளிகள் சிலர் மகளை கடத்தி வைத்து கொண்டு குற்றவாளிகள் சிலரை விடுவிக்க சொல்கின்றனர். அதை அவர் செய்தாரா.? இல்லையா..? என்பது தான் படத்தின் கதை. இந்தப்படம் முற்றிலும் வித்தியாசமானது. ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொன்றுடன் தொடர்பு உடையது. இந்தப்படத்தில் நடிக்க எனக்கு சுலபமாக இருந்தது, ஏனென்றால் நானும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக உள்ளேன்.
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன.?
என்னை பொறுத்தவரை அனுபவம் தான் ஒரு நல்ல ஆசிரியர் என்பேன், அந்தவகையில், நான் கண்ட அனுபவங்கள் தான் எனது வெற்றியின் ரகசியம். ஒரு படத்தின் வெற்றியால் மட்டுமல்ல, தோல்வி படத்தாலும் கூட நிறைய அனுபவம் கிடைத்தது. மீடியாக்களின் பாராட்டு மற்றும் விமர்சனம் போன்றவையும் என்னை வாழ்க்கையில் உயர்த்தியது. ஐந்தாண்டு இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தது சந்தோஷம். இப்பவும் என்னை வைத்து படம் இயக்க இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்வர நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கூடவே எனக்கான ரசிகர்களும் எனது படத்தை காண ஆவலாக இருக்கின்றனர். அக்.,9ம் தேதி அவர்கள் திரையில் காண்பார்கள்.
இவ்வாறு நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.