பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இவர் நடித்து உள்ள, 'குவான்டிகோ' என்ற அதிரடியான ஆங்கில தொலைக்காட்சி தொடர், ஏ.பி.சி., 'டிவி'யில், ஒளிபரப்பாகி வருகிறது. இதில், எப்.பி.ஐ., அதிகாரியாக நடித்துள்ளார் பிரியங்கா. இந்திய நடிகை ஒருவர், அமெரிக்க டிவி தொடரில், மிக முக்கியமான கேரக்டரில் நடிப்பது இதுவே முதல் முறை என்பதால், பாலிவுட் பிரபலங்கள் அவரை பாராட்டு மழையில் நனைய வைக்கின்றனர். 'டுவிட்டர், பேஸ்புக்' என, சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகளால், திக்கு முக்காடிப் போயுள்ளார் பிரியங்கா. அடுத்ததாக, அவர் நடித்துள்ள,'பஜிரோ மஸ்தானி' என்ற இந்தி படம், டிசம்பரில் திரைக்கு வருகிறது. இதில், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே போன்றோர் நடித்திருந்தாலும், பிரியங்காவுக்கு தான் முக்கியமான வேடம். மேலும், இந்த படம் வெளியாகும் அதே நாளில், ஷாரூக் - கஜோல் இணைந்து நடித்துள்ள, 'தில்வாலே' என்ற படமும், வெளியாகவுள்ளது.