துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வெளிவருவது மிகவும் குறைவே. ஹிந்தித் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாக அப்படிப்பட்ட படங்கள் வெளிவந்து வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. தென்னிந்தியத் திரையுலகில் தன்னுடைய அழகாலும், தோற்றத்தாலும் சமீபத்தில் பல ரசிகர்களை வசீகரித்தவர்களில் அனுஷ்கா முதன்மையானவர். கொஞ்சம் மெச்சூர்டான முகம் என்றாலும் அதை அவருடைய உடல் அழகு மறைத்துவிடுகிறது. இப்படி ஒரு தோற்றத்தில் தென்னிந்தியாவில் தற்போதைக்கு வேறு யாரையும் பார்க்க முடியாது என பெயர் எடுத்துவிட்டார் அனுஷ்கா.
2005ம் ஆண்டு 'சூப்பர்' என்ற படத்தில் அறிமுகமான அனுஷ்கா தெலுங்கில் பல படங்களில் நடித்த பிறகே தமிழில் புகழ் பெற ஆரம்பித்தார். 2009ம் ஆண்டு கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'அருந்ததி' திரைப்படம் அனுஷ்காவின் திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்து அவருடைய படங்களின் வரிசையில் முக்கியப் படமாக இடம் பிடித்தது. அதன் பின் அனுஷ்காவுக்கென தமிழ், தெலுங்குத் திரையுலகில் தனி இடம் கிடைத்தது.
தற்போது சாதனை படைத்துள்ள 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் அனுஷ்காவிற்கு அதிக முக்கியத்துவமில்லை. பிரபாஸும், ராணாவும்தான் கதையை ஆக்கிரமித்திருந்தார்கள். ஆனால், அடுத்து வெளிவர உள்ள 'ருத்ரமாதேவி' படத்தில் அனுஷ்கா டைட்டில் ரோலில் நடிப்பதால் மீண்டும் ஒரு 'அருந்ததி' வெற்றியை தமிழ், தெலுங்குத் திரையுலகங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.
அப்படி ஒரு அசத்தலான வெற்றி அனுஷ்காவுக்குக் கிடைத்தால் அடுத்த 'லேடி சூப்பர் ஸ்டார்' என தாராளமாக அழைக்கலாம்.