தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு நடிகர் சங்க தேர்தல் அனல் பறந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் சரத்குமார். ஆனால் இந்தாண்டு அப்படியில்லை சரத்குமார் அணியினரை எதிர்த்து விஷால் அணியினர் களத்தில் குதித்துள்ளனர். நடிகர் சங்கம் கட்டடம் தொடர்பாக எழுந்த பிரச்னையால் விஷால் அணியினர் தேர்தலில் குதித்துள்ளனர். இரு அணியினரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வருகிற 18ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இரு அணியினரும் நாடக நடிகர்களிடம் ஆதரவு வேண்டி ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விஷால் அணியினர் தமிழகம் முழுக்க ஓட்டு வேட்டை நடத்துகின்றனர். இதன் ஒருகட்டமாக அந்த அணியினர் தங்களது சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளனர். இன்று(அக். 7ம் தேதி) மாலை விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் ஒரு பஸ்ஸில் தங்களது சுற்று பயணத்தை தொடங்கினர். சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனை அருகே இந்த பயணம் துவங்கியது.
இதில் ரோகினி, கோவை சரளா, ராஜேஷ், ஜூனியர் பாலையா, ரமணா, நந்தா, சாந்தனு, விக்னேஷ், பசுபதி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நடிகர்கள் புறப்பட்டு சென்றனர். நாளை சேலம் மற்றும் நாமக்கலில் உள்ள நாடக நடிகர்களிடம் ஆதரவு வேண்டி ஓட்டு கேட்டு செல்கின்றனர்.
பாண்டவர் அணியினரிடம் தங்களது பயணத்தை பற்றி கேட்டபோது ஒட்டுமொத்த குழுவும், நடிகர் சங்கத்தை மீட்பதே எங்களது நோக்கம், நாடக கலைஞர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கண்டிப்பாக இந்த பாண்டவர் அணி ஜெயித்து நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்போம் என்றனர்.
முன்னதாக பாண்டவர் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் கருணாஸ் முன்னதாகவே புறப்பட்டு சென்று முன்னேற்பாடுகளை செய்து வருவதாகவும், விஷால் மற்றும் கார்த்தி நாளை தங்களது அணியோடு சேர்ந்து ஆதரவு திரட்ட இருப்பதாகவும் பாண்டவர் அணியினர் தெரிவித்துள்ளனர்.