பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
நடிகர் சங்கம் பிரச்னையில் ரஜினி, கமல் ஏன் முன்வரவில்லை என்று நடிகை ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் கட்சிகளின் தேர்தல் களத்தை விட நடிகர் சங்கத்தின் தேர்தல் சூடு பறக்கிறது. நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர். இதில் நடிகர் சங்கம் கட்டடம் தொடர்பாக சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர் விஷால் அணியினர். அதேசமயம் விஷால் அணியினரின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருவதோடு, விஷால் அணியினரையும் விமர்சனம் செய்து வருகின்றனர் சரத்குமார் அணியினர்.
இந்நிலையில் சரத்குமார் அணியினர், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா... நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. தேவையில்லாமல் விஷால் அணியினர் குற்றம் சுமத்துகின்றனர். அடுக்கடுக்கான பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். நடிகர் சங்க கட்டடத்தை இடிக்கும்போது ஏன் நீங்கள்(விஷால் அணியினர்) வரவில்லை. விஷால் - கார்த்தி அணியினருக்கு பின்னால் யாரோ ஒருவர் இருக்கிறார். அவர் தான் இவர்களை தூண்டிவிடுகிறார். நடிகர் சங்க பிரச்னையில் என்ன நடக்கிறது என்று பேச ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஏன் முன்வரவில்லை. கமலை கேட்டால் சர்ச்சைக்குள் வர விரும்பவில்லை என்று கூறுகிறார்.
நடிகர்களாகிய நாம் எல்லாம் ஒரு குடும்பம். நடிகர் சங்கத்தை குலைக்க வேண்டாம் என்று விஷாலை கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு நடிகை ராதிகா கூறினார்.