'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்தவாரம் மலையாள சேனல்களின் பக்கம் டிவி ரிமோட்டை திருப்பியபோது மழவில் மனோரமா என்கிற சேனலில் நம்ம தேவயானி விதவிதமான அதிர்ச்சி முகபாவங்களை காண்பித்துக் கொண்டிருந்ததை ஏதேச்சையாக பார்க்க முடிந்தது. சங்கதி என்னவென்று விசாரித்தால் அது 'உக்ரம் உஜ்வலம்' என்கிற கேரளாவில் ஹிட்டான ரியாலிட்டி ஷோவின் சீசன்-2 நிகழ்ச்சி என்பதும் தேவயானி அதன் ஜட்ஜ் ஆக பொறுப்பேற்று இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. தேவயானி ஏற்கனவே மலையாள ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான்.
இந்த ஷோவில் மைய நடுவராக வினீத் பொறுப்பு வகிக்க, பெண் நடுவர்கள் மட்டும் அவ்வப்போது சீசனுக்கு தகுந்தமாதிரி மாறிக்கொள்வார்கள். சில மாதங்களுக்கு முன்பு கௌதமி, கனிகா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.. இப்போது கௌதமிக்கு பதிலாக தேவயானி என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த ஷோவில் டான்ஸ் மட்டும் இல்லாமல் கராத்தே, த்ரில்லிங் விளையாட்டு என பல அம்சங்கள் இருப்பதால் வழக்கமான ரியாலிட்டி ஷோ போல இல்லாமல் உற்சாகமாக இருப்பதாக சொல்கிறார் தேவயானி. இந்த ஷோவில் இவர் பார்த்து திகைத்தது ஜிம்னாஸ்டிக் சாகசத்தில் ஈடுபட்ட ஒரு இளம்பெண்ணின் திறமையைத்தான்.