மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகி இருக்கிறார் விஜய். அதன்காரணமாக அவரது ஒவ்வொரு படங்களின் டீசர், டிரைலர் என ஒவ்வொன்றும் வெளியாகும்போதும் அவரது ரசிகர்கள் இணையதளங்களில் அதை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அதோடு படங்கள் வெளியாகும்நேரத்திலும் பெரிய பரபரப்பை கிரியேட் பண்ணி விட்டு வருகின்றனர். மேலும், விஜய்யை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் தவறாக சித்தரித்தால் அதற்கு உடனுக்குடன் பதில் கொடுத்தும் மோதிக்கொள்கின்றனர்.
இந்த நிலையில், புலி படத்தின் ரிலீஸ் அன்று விஜய்யின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியபோது பல கோடிகள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அன்றைய தினம் கோடம்பாக்க நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என 25க்கும் மேற்பட்டோர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் சேராத 100 கோடி ரூபாய் சிக்கியதாகவும் அதன்பிறகு செய்திகள் வெளியாகின.
அதோடு வரி ஏய்ப்பு பட்டியலில் விஜய்யின் பெயரும் இடம்பெற்றது. ஆனால் தற்போது அதற்கு விஜய்தரப்பில், ஒவ்வொரு ஆண்டும் தனது வருமானத்திற்குரிய வரியை எந்தவித பாக்கியும் இல்லாமல் அவர் செலுத்தி வருவதாகவும், மீடியாக்கள்தான் இந்த செய்தியை தவறாக பரப்பி விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, விஜய்யின் ரசிக கோடிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு, இணையதளங்களில் இந்த தகவலை வெளியிட்டு விஜய் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் முயற்சியில் வரிந்து கட்டியுள்ளனர்.