‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியை முதலில் நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் நடத்தி வந்தார். குடும்பப் பிரச்னைகளுக்கு பஞ்சாயத்து செய்யும் அந்த நிகழ்ச்சியின்போது என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று லட்சுமிராமகிருஷ்ணன் அடிக்கடி பேசிய அந்த வார்த்தையை பின்னர் விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியில் கலாய்த்தனர்.
ஆனால் அப்போது அதை பெருசாக எடுத்துக்கொள்ளாத அவர், அதே நிகழ்ச்சியில் மீண்டும் சமீபத்தில் தன்னை கலாய்த்தபோது டென்சனாகி விட்டார். அதற்கு பகீரங்காக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதோடு அவர் நீதிமன்றத்தை அணுகியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது சொல்வதெல்லாம் உண்மை என்ற அந்த நிகழ்ச்சியை லட்சுமிராமகிருஷ்ணனுககு பதிலாக நடிகை சுதா சந்திரன் நடத்தி வருகிறார்.
மேலும், வாரத்தில் ஐந்து நாட்கள் ஒளிபரப்பாகி வந்த அந்த நிகழ்ச்சியை தற்போது வாரம் இரண்டாக குறைத்து விட்டனர். காரணம், அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கியவர்களையும் அழைத்து வந்து பேசுகிறார்கள். ஆனால் இதற்கு சிலர் ஒத்துக்கொண்டபோதும், பலர் மறுக்கிறார்களாம். அதோடு அவர்களை கட்டாயப்படுத்தினால் மிரட்டல் விடுக்கிறார்களாம். இப்படி பிரச்சினைக்குரியவர்கள் வெளியில் முகம் காட்டு மறுத்து வருவதினால்தான் வாரம் இரண்டு எபிசோடாக குறைத்து விட்டார்களாம். ஆனால் இன்னும் சில காலத்தில் அந்த நிகழ்ச்சியே முற்று பெற்றுவிடும் என்றும் கூறப்படுகிறது.