தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு என 20 படங்களுக்கு மேல் நடித்து விட்டவர் சமந்தா. ஆனால் இதுவரை அவர் நடித்த வேடங்கள் ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்தமானதாக இருந்திருக்கிறது. சமந்தாவைப் பொறுத்தவரை முதலில் ரசிகர்களை திருப்திபடுத்திக்கொள்வோம். அதன்பிறகு நமக்கு திருப்திதரக்கூடிய வேடங்களை செலக்ட் பண்ணி நடிக்கலாம் என்று முடிவில்தான் இருந்து வந்தாராம்.
அந்த வகையில், அஞ்சான், கத்தி படங்களுக்குப்பிறகு தமிழில் அவர் தனுசுடன் நடித்துள்ள விஐபி-2 படத்தில் சமந்தாவுக்கு கிடைத்திருக்கும் கேரக்டர் அவரை வெகுவாக பாதித்துள்ளதாம். அதாவது சினிமாவுக்கு வந்து ஐந்தாண்டுகளாக நான் ஏங்கிக்கொண்டிருந்த வேடம் இந்த படத்தில்தான் கிடைத்திருக்கிறது என்கிறார் சமந்தா.
அதுகுறித்து அவர் கூறுகையில், அன்பு, பாசம், காதல் என குடும்ப உறவுகளில் உருவாகும் படத்தில் குடும்பப் பெண்ணாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது பெரிய ஆசையாக இருந்து வந்தது. அதை விஐபி-2 படம்தான் தீர்த்து வைத்திருக்கிறது. அந்த படத்தில் நான் புடவை கட்டிய பெண்ணாக படம் முழுக்க நடித்திருக்கிறேன். மாடர்ன் கெட்டப்பில் தொடர்ந்து நடித்து வந்த எனக்கு இந்த வேடம் ரொம்ப பிடித்திருக்கிறது. என்னைப்பார்த்து நானே ரசித்த வேடம் இதுதான். அதோடு எனது இந்த கெட்டப் இன்னும் பெருவாரியான ரசிகர்களை கவரும் என்று நினைக்கிறேன் என்கிறார் சமந்தா.