ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டில் யங் சூப்பர் ஸ்டார் என அறியப்படும் மகேஷ் பாபுவை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய இயக்குனர்களில் பூரி ஜெகன்நாத்தும் ஒருவர். இந்நிலையில் போக்கிரி, பிசினஸ்மேன் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மகேஷ் பாபு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் அப்படத்திற்கு ரூஜ் எனவும் பெயரிடப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது மகேஷ் பாபு பிரமோற்சவம் படத்தில் நடித்து வருகின்றார். பூரி ஜெகன்நாத் வருண் தேஜ் நடிக்கும் லோபர் படத்தை இயக்கி வருகின்றார்.
இந்நிலையில் பூரி ஜெகன்நாத் லோபர் படத்திற்கு பின்னர் ரூஜ் படத்தை இயக்கவுள்ளதாகவும் அப்படத்தில் புதுமுகம் ஒருவர் நாயகனாக நடிக்க தேர்வாகி உள்ளதாகாவும் கூறப்படுகின்றது. மகேஷ் பாபு நிராகரித்த கதையில் இஷான் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இஷான் தயாரிப்பாளர் சி.ஆர்.மனோகர் என்பவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.