தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிழல் தொடர் மற்ற தனியார் தொலைக்காட்சி தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கே.ஏ.ராஜபாண்டியன் எழுதிய கதையை சையத் ரஃபிக் பாஷா இயக்குகிறார்.
முதியவர்கள், குழந்தைகள் அடைக்கலமாகி இருக்கும் அன்பு இல்லம் தான் கதை களம். இங்கு நடக்கும் சுவாரஸ்யமான, நெகிழ்ச்சியான, திடுக்கிடும் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காதல் கணவனால் ஏமாற்றப்பட்ட கலா தன் குழந்தையுடன் அன்பு இல்லத்தில் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வது ஒரு கதை. பார்வை இழந்த ஆனந்தன் அநாதையாக அன்பு இல்லத்தில் தஞ்சம் அடைகிறான். அங்கு அவனுக்கு ரஞ்சனி என்ற பெண்ணின் அன்பும், காதலும் கிடைக்கிறது. அந்த காதலுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதை எதிர்த்து காதலர்கள் போராடுவது தனிக் கதை. இப்படி ஒரே இடத்தில் நடக்கும் இரண்டு கதைகளுடன் தொடர்கிறது நிழல்கள் தொடர். தற்போது இது 100 வது எபிசோடை கடந்திருக்கிறது. பொதிகை டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.