டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' சூர்யாவின் 'மாசு என்கிற மாசிலாமணி' எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த 'பாகுபலி' என மூன்று பெரிய படங்கள் நேற்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின என்று சொன்னால் சிலர் அதிர்ச்சியடைவார்கள்! சிலர் அடிக்க வருவார்கள். எப்பய்யா இந்தப்படங்களை டிவயில் போட்டாங்க என்று சிலர் குழம்பிப்போவார்கள்.
இந்தத் தகவல் பொய்யில்லை, உண்மைதான். இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ராஜமௌலியின் 'பாகுபலி' படம் இன்னமும் சில தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வசூலில் பெரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இப்படத்தின் அதிகாரபூர்வமான டிவிடி சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து பிரபல மலையாள சேனலான மழவில் மனோரமாவில் நேற்று மாலை 6 மணிக்கு 'பாகுபலி' படத்தின் மலையாள பதிப்பு ஒளிபரப்பானது.
சூர்யா நடித்த ' 'மாசு என்கிற மாசிலாமணி' திரைப்படமும் சூர்யா மலையாள சேனலில் நேற்று மாலை ஒளிபரப்பப்பட்டது.
கேரளத்தில் இப்படி என்றால் ஆந்திராவிலோ அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'எந்தவானி காடு' பிரபல தெலுங்கு சேனலான மா டிவியில் ஒளிபரப்பப்பட்டது.