600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ஜீவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் அதிபர். பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பெரும் தோல்வியடைந்த படம். இதனை கண்ஸ்டோரியம் ஸ்டூடியோ சார்பில் கனடா வாழ் தமிழர் டி.சிவகுமார் தயாரித்திருந்தார். முதல் படம் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றே தீருவேன் என்று அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டார். மேலும் ஆண்டுக்கு 3 படங்கள் தயாரிப்பேன் என்றும் சொல்கிறார். அவர் கூறியதாவது:
அதிபர் படம் என் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றியது. ரியல் எஸ்டேட் அரக்கர்களிடம் என்னைப்போல யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட படம். அதன் வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை. நான் சொன்ன விஷயம் மக்களை சென்று சேர்ந்ததில் மகிழ்ச்சிதான்.
தற்போது யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அடுத்த படத்தை தயாரிக்கிறேன். அதன் கதையை நான் எழுதியிருக்கிறேன். நான் அவனில்லை படத்தை இயக்கி செல்வா இயக்குகிறார். 3 ஹீரோக்கள் நடிக்கிறார்கள். போரின் போது ஒரு ஊரே திரண்டு வேறொரு நாட்டுக்கு செல்கிறது. அவர்கள் எப்படிச் சென்றார்கள். சென்ற இடத்தில் என்ன மாதிரி வாழ்ந்தார்கள் என்கிற கதை. இலங்கை ராணுவம், விடுதலைபுலிகள் போன்ற எந்த அம்சமும் இருக்காது. மனித உணர்வுகளை மையமாக கொண்ட படமாக இருக்கும். அடுத்து ஜனவரியில் பெரிய ஹீரோ நடிக்கும் கமர்ஷியல் படம் ஒன்றை தயாரிக்கிறேன். ஆண்டுக்கு 3 படங்கள் தயாரிக்கும் திட்டம் வைத்திருக்கிறேன். என்கிறார் சிவகுமார்.