ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியில் நேற்று சிரிச்சா போச்சுசு ரவுண்டில் 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா 2' என சிரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அது சம்பந்தமாக இரண்டு நாட்களுக்கு முன்னதாக வந்த புரோமோவைப் பார்த்தே 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா' வை மக்களிடம் பேச வைத்த இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். விஜய் டிவியை நீதிமன்றத்தில் சந்திக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், நேற்று அந்த நிகழ்ச்சி எந்தத் தடங்கலுமின்றி அப்படியே ஒளிபரப்பானது. மிகவும் ஓவராகவும், கொஞ்சம் ஆபாசமாகவும் 'கலாய்க்கிறோம்' என்ற பெயரில் வரம்பு மீறித்தான் அந்த நிகழ்ச்சி இருந்ததாக லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக நேற்றிலிருந்தே பலர் குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் 'தூக்கி எறியப்படும் பிஸ்கட்டுக்காக நாய் மாதிரி வாலாட்டிக் கொண்டிருக்க மாட்டேன்' என காட்டமாக தனது பதிவை வெளிப்படுத்தியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
“இந்த சினிமாவை விட்டே விலகினாலும் நான் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன். என்னுடைய சுய மரியாதையை இழக்க மாட்டேன். இந்தத் துறைக்கு வரும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை, அதே போல் போகும் போது வெறும் கையுடன் போவதற்கும் கவலைப்பட மாட்டேன்.
மக்களே என்னுடைய வேலையை நிறுத்துங்கள் என்று சொல்லும் வரை நான் ஓயமாட்டேன். கடவுளுக்கும், என்னுடைய பெற்றோருக்கும்தான் தலை வணங்குவேன், மற்ற யாருக்காகவும் தலை குனிய மாட்டேன். சாலை மீது படுத்துத் தூங்குவேன் அல்லது பசியால் இறப்பேனே தவிர என்னுடைய சுய மரியாதையை இழக்க மாட்டேன் , வெளிவேஷம் போட மாட்டேன். ஒரு பெண்ணாக இருக்க பெருமைப்படுகிறேன், முகமூடி அணிந்து கொண்டு இருக்க மாட்டேன், நான் நானாகவே இருப்பேன். என் வழியின் நான் நடப்பேன்,” என காட்டமாக தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்.