இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ராஜமவுலியின் பாகுபலியைத் தொடர்ந்து குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா நாயகியாக நடித்துள்ள ராணி ருத்ரம்மாதேவி படம் வருகிற 9-ந்தேதி உலகமெங்கிலும் ரிலீசாகிறது. ராணி ருத்ரம்மா தேவியின் வாழ்க்கை வரலாற்று கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்துக்காக சண்டை காட்சிகளில் ரத்தம் சிந்தி நடித்தார் அனுஷ்கா. பிரபாஸ், ராணா போன்ற நடிகர்களுக்கு இணையாக வாள் பிடித்து சண்டை செய்துள்ள அனுஷ்கா, இந்த படம் தன்னை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால், இதுவரை தான் நடித்த எந்த படங்களைப் பற்றி ரிலீஸ் விவரம் கேட்டறியாதவர். இந்த படம் எத்தனை தியேட்டர்களில் எந்தெந்த நாடுகளில் வெளியாகியது என்பதை ஆர்வத்துடன் கேட்டறிந்தாராம்.
மேலும், இந்தியாவின் முதல் 3டி வரலாற்றுப்படம் என்கிற பெருமையை பெற்றுள்ள இந்த ருத்ரம்மா தேவி படம், அனுஷ்காவின் கேரியரில் ஒரு மைல் கல் படமாகும். இனிமேல் அவருக்கு இப்படியொரு படம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள். அந்த அளவுக்கு ஒரு அதிரடி வரலாற்று காவியமாக இப்படம் உருவாகியிருக்கிறது. அதோடு, இளையராஜாவின் இசையும் படத்துக்கு இன்னொரு பெரிய பலமாக அமைந்துள்ளதாம். இப்படி பலரது கூட்டுத்திறமைகள் அனைத்தும் அனுஷ்காவிற்கு பெரிய பலமாக அமைந்திருப்பதோடு, இதுவரை ஆக்சன் வேடங்களில் நடித்த அத்தனை நடிகைகளையும் அதிர வைக்கும் அளவுக்கு அனுஷ்காவின் அதிரடி நடிப்பு இந்த படத்தில் வெளிப்படுள்ளதாம்.