நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
நடிகர் சந்தானமும், நடிகர் சேதுவும் பால்ய சினேகிதர்கள். டாக்டருக்கு படித்துள்ள சேது அந்த சமயத்தில் சந்தானத்துக்கு அவ்வப்போது செலவுக்கு பணமெல்லாம் கொடுப்பாராம். இந்த தகவலை சந்தானமே மேடைகளில் சொல்லியிருக்கிறார். பின்னர் ஒரு சமயத்தில் சந்தானம் லொள்ளு சபா நடிகராகி அதையடுத்து சினிமாவிலும் பிரவேசித்தார். அப்போது நான் சினிமாவில் பெரிய நடிகராகி விட்டால் உன்னையும் நடிகராக்கி விடுவேன் என்று சேதுவிடம் சொன்னாராம் சந்தானம். அதன்படியே தான் பெரிய காமெடியனான பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சேதுவை ஹீரோவாக்கினார்.
அதன்பிறகு வாலிபராஜா என்ற பெயரில் சேது நாயகனாக நடித்த படத்தில் ஒரு டாக்டர் வேடத்தில் சந்தானம் நடித்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்திருந்த விசாகா சிங்கே நாயகியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் ஒரு வருடத்திற்கு மேலாக வியாபாரம் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது. அதனால் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று வந்த சேதுவுக்கு அடுத்தபடியாக புதிய படங்கள் கமிட்டாகவில்லை. அதோடு சந்தானமும் ஹீரோவாகிவிட்டதால் அவரது அரவணைப்பும் குறைந்துவிட்டது. விளைவு, அடுத்தபடியாக சினிமாவில் வாய்ப்புகள் தேடி வந்தால் நடிக்கலாம் இல்லையேல் முழு நேர டாக்டராகி விடலாம் என்று இப்போது சென்னையில் ஒரு நவீன தொழில் நுட்பமுள்ள கிளினிக் திறக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் நடிகர் சேது.