Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஊழல் குறித்து நடிகர் விஜய் பேசலாமா? ரெய்டுக்கு பின் கடும் விமர்சனம்

04 அக், 2015 - 01:44 IST
எழுத்தின் அளவு:
Will-actor-Vijay-speak-against-corruption?

நடிகர் விஜய் நடித்து, சமீபத்தில் வெளியான, புலி படம், பல கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இதுதொடர்பான செய்திகள் வெளியானதும், வருமான வரித் துறையினர் உஷாராயினர்.

விஜய் மற்றும் படத் தயாரிப்பாளர் தொடர்பான விவரங்களை விறுவிறுவென சேகரித்து, அவர்கள் தொடர்பான இடங்களில், வருமான வரித்துறையினர், ரெய்டு நடத்தினர்.இதில், கணக்கில் காட்டப்படாத, பல கோடி ரூபாய் வருமானத்துக்கான, கணக்கு வழக்குகள், நகைகள், ஆவணங்களை கைப்பற்றியதாக, வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.நடிகர் விஜய், நடிகை கள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் வீடுகளில் நடத்திய சோதனை மூலம், 100 கோடி ரூபாய்க்கான கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதை வருமானமாக கருதி, 30 கோடி ரூபாய் வரையில், அபராதம் விதிக்கப் போவதாகவும் செய்திகள்
வெளியாகி உள்ளன. இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து, சினிமா வட்டாரங்களில் கடுமையான விமர்சனம் கிளம்பி உள்ளது.

இது குறித்து, சினிமா பிரபலங்கள் சிலர் கூறியதாவது:இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய விஜய், அடுத்த சில நாட்களில், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான காங்கிரசில் சேர முயன்றார். இதற்காக அக்கட்சியின், துணை தலைவர் ராகுலை சந்தித்தார். அப்போது, ராஜ்யசபா எம்.பி., பதவியும், இளைஞர் அணி பதவியும் கேட்டார். ஆனால், ராகுல் மறுத்து விட்டார்.இதன் பின், தி.மு.க., ஆதரவு நிலை எடுத்தார். பொருளாளர் ஸ்டாலினை, தளபதி என அழைப்பது போல், தன்னை, இளைய தளபதி என அழைத்துக் கொண்டார்.

தி.மு.க., தலைமையின் வாரிசுகளும், சினிமாவில் தனக்கு போட்டியாக வருகின்றனர் என்றதும், அ.தி.மு.க., பக்கம் திரும்பினார்.அ.தி.மு.க.,வுக்காக, கடந்த சட்டசபை தேர்தலில், சில இடங்களில் மேடை போட்டு பேசினார். தன்னால் தான் வெற்றி என, பேச துவங்கியதும், அவரை, முதல்வர் ஒதுக்கி வைத்தார்.

பின், 2013ல், டில்லி ஜந்தர் மந்தரில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நடத்திய, ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். 2014ல், லோக்சபா தேர்தல் வந்ததும், பா.ஜ., வெற்றியடையும் என தெரிந்து, மோடியை சந்தித்து, ஆதரவாளராக காட்டிக் கொண்டார்.இப்படி அடிக்கடி நிலை மாறிய விஜய், தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள, தன் படங்களில், பஞ்ச் வசனங்களை வைத்தார்.

இந்நிலையில்தான், வருமான வரித் துறையினர், சோதனை நடத்தி, அவரது வீட்டில், கணக்கில் காட்டப்படாத பணத்துக்கான ஆவணங்களை, பொருட்களை கைப்பற்றி உள்ளனர். இனியாவது, அவர் ஊழல் பற்றி பேசாமல் இருப்பாரா?இவ்வாறு அவர்கள் கூறினர். -

நமது நிருபர் -

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in