ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாரி படத்தை அடுத்து தற்போது விஐபி-2 படத்தை தயாரித்து வரும் தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' படநிறுவனம் தயாரித்துள்ள மற்றொரு படம் 'நானும் ரௌடிதான்'.
விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். முதன்முறையாக நயன்தாராவும் விஜய்சேதுபதியும் ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை போடா போடி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
தனுஷ் தயாரித்துள்ள படம் என்றாலே கமர்ஷியலாக இருக்கும் என்பதால் இப்படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய்சேதுபதி, நயன்தாரா என இரண்டுபேரும் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள படம் என்ற காரணமும் நானும் ரௌடிதான் படத்தின் மீது கூடுதல் கவனஈர்ப்பைக் கொடுத்திருக்கிறது. எனவே இப்படத்தின் தமிழக மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமையை வாங்க போட்டியே ஏற்பட்டது. கடைசியில், விஜய்யை வைத்து 'கத்தி' படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி உள்ளது.
இந்நிலையில் 'நானும் ரௌடிதான்' படத்தை கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்திய மாநிலங்களில் தனுஷின் 'வுண்டபார் ஃபிலிம்ஸ்' நிறுவனமே நேரடியாக விநியோகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு தாண்டி கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவில் தன் வியாபார எல்லையை விரிவுபடுத்தி இருக்கிறார் தனுஷ். அடுத்த கட்டமாக தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் பிற மொழிப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம்.