'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
ஒரு காலத்தில் சின்னத்திரை சீரியல்களை கலக்கி வந்தவர் தேவிப்பிரியா. நாயகி, வில்லி என பலதரப்பட்ட வேடங்களில் நடித்தார். அதோடு, சினிமாவிலும் சில படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார். என்றாலும் அவரது கவனம் சீரியல்களிலேயே அதிகமாக இருந்ததால் சினிமாவில் பெரிய அளவில் வளர முடியவில்லை. ஆனால் இப்போது அவர் சீரியல்களிலும் வில்லி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதும், சினிமா வாய்ப்புகளையும் அதிகமாக வரவேற்கிறார். காரணம், என்னதான் சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தாலும் சினிமா நடிகை என்கிறபோதுதான் மரியாதையும், சம்பளமும் சின்னத்திரை உலகில் அதிகமாக கிடைக்கிறதாம்.
அதன்காரணமாக, கத்துக்குட்டி படத்தில் ஒரு நடிகை கதாபாத்திரத்தில் நடித்த தேவிப்பிரியா தற்போது மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். அதேசமயம் சீரியல்களைப் பொறுத்தவரை, வில்லி வேடங்களுக்கே அவர் முதலிடம் கொடுக்கிறாராம். என்னைக்கேட்டால், சீரியல்களில் வில்லிதான் கதாநாயகியே. கதையை நகர்த்தி செல்லும் மொத்த பொறுப்பும் வில்லியிடமே இருப்பதால் அதில்தான் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். அதனால்தான் நான் வில்லி வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று கூறும் தேவிப்பிரியா, சினிமாவில் வில்லி வேடம் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறாராம். அந்த வகையில், சினிமா-சின்னத்திரை இரண்டு மீடியாக்களிலும் மெகா வில்லியாக ஒரு பெரிய ரவுண்டு வரவேண்டும் என்பதுதான் தேவிப்ரியாவின் ஆசையாக உள்ளதாம்.