ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். ரேடியோ ஜாக்கியான இவர், அதன்பிறகு சினிமாவிலும் சில படங்களில் நடித்தார் ஆனால் எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் செந்திலின் பெயரளவில இருந்த பரபரப்பு நாளுக்குநாள் குறைந்து வந்தது. இந்த நேரத்தில்தான் அவரை போலீசார் கைது செய்து இழுத்து சென்றதாக ஒரு மொபைல் வீடியோ வைரலாக பரவியது. ஆக, ஒரே நாளில் ஹாட் டாப்பிக்காகி விட்டார் மிர்ச்சி செந்தில். அதையடுத்து காதல் மனைவியை வரதட்சணை கொடுமை செய்ததால் அவரை போலீசார் கைது செய்ததாகவும் இணையதளங்களில் செய்தி வெளியானது.
ஆனால் இப்போது அதுபற்றி மிர்ச்சி செந்திலிடம் விசாரித்தால், அது ஒரு கட்டுக்கதை என்கிறார். மிர்ச்சியில் வெளியாகும் சுட்டகதை என்கிற நிகழ்ச்சிகான புரமோதான் அந்த வீடியோ. இந்த நிகழ்ச்சியை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக யோசித்தபோதுதான் என்னை போலீஸ் கைது செய்து இழுத்து செல்வது போன்று வீடியோ வெளியிட்டால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக திட்டமிட்டு இதை செய்தோம். அதற்கு எதிர்பார்த்ததை விடவும் பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது என்கிறார் மிர்ச்சி செந்தில்.