டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் புலி. செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் அக்டோபர் 1-ந்தேதிக்கு ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் கதை எனது தாகபூமி குறும் படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதனால் விஜய் நடித்துள்ள புலி படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என்ற அன்பு ராஜசேகர் என்பவர் தஞ்சை நீதிமன்றத்தில் தடைகோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆனால் நேற்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை அக்டோபர் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்து விட்டார். அதோடு புலி படம் வெளியாக எந்தவித தடையும் விதிக்கவில்லை. அதனால் நாளை திட்டமிட்டபடியே புலி தியேட்டர்களுக்கு வந்துவிடும் என்பது உறுதியாகி விட்டது.
மேலும், சமீபத்தில் தணிக்கைக்குழு சான்றிதழுக்காக திரையிடப்பட்ட புலி படத்துக்கு யு சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதையடுத்து புலி படத்தைப்பற்றிய தகவல்களும் கோலிவுட்டில் உலவத் தொடங்கி விட்டது. அந்த வகையில், விஜய்யின் புலி படம் தெலுங்கில் ராம்சரண் நடித்த மகதீரா படம் சாயலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதி படம் வரை நிகழ்காலத்தில் நகரும் படம், ஒரு கட்டத்தில் சரித்திர படமாக மாறுகிறதாம். அதாவது கார்ட்டூனிஸ்டான விஜய் வரையும் சரித்திர கால படங்கள் உயிர் பெற்று அவரையும் அந்த காலகட்டத்துக்கு இழுத்து சென்று விடுமாம். அதையடுத்து அவர் அங்கு சந்திக்கிற விசயங்கள்தான் புலி படமாம். அதோடு, பாகுபலி படத்துக்கு இணையான பிரமாண்டம் இல்லையென்றாலும், அந்த படத்தைப் போன்ற வரலாற்று காட்சிகளும் புலியில் இடம்பெற்றுள்ளதாம்.