ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நிகழ்ச்சிகளுக்கு தேர்ந்தெடுத்து தான் செல்வது வைரமுத்துவின் வழக்கம். தன் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கி தன் சகாக்கள், நண்பர்களிடம் பேசும் போது தன் ஆசையை வெளியிட்டார். ''நான் இந்த அழைப்பிதழை உங்கள் வீடு தேடிவந்து தான் கொடுத்திருக்க வேண்டும். அதுதான் முறை பண்பாடு, காலம் அனுமதிக்காததால் இங்கு வந்து பெற்றிருக்கிறீர்கள் தமிழுக்காக இதை அனுமதித்து பெற்றிருக்கிறீர்கள் அதற்கு நன்றி. உங்களையெல்லாம் சந்திக்கிற போது எனக்கு ஊக்கம் பிறக்கிறது, சக்தி கிடைக்கிறது.
நாம் இனி அடிக்கடி கூட வேண்டும், விவாதிக்க வேண்டும், தமிழ் பேச வேண்டும், கொண்டாட வேண்டும், வள்ளுவர் தொடங்கி நிகழ்கால கவிஞர்கள் வரை விவாதிக்கலாம். இலக்கியம் மட்டுமல்ல உடல் நலம் பற்றி பேச வேண்டும். இனி நாம் உயர் மருத்துவர்களை அழைத்து உடல் நலம் பற்றி கருத்தரங்குகள் நடத்தலாம். பிற கலைகள் பற்றிய விவாதங்கள் நடத்தலாம். முன்னாள் நீதிபதிகளை அழைத்து சட்டங்கள் பற்றி விவாதிக்கலாம் விஞ்ஞானிகளை அழைத்து எதிர்காலம் பற்றி விவாதிக்கலாம் ஒரு கூட்டத்துக்கு முக்கியமான தேவை எது தெரியுமா? ஒலிபெருக்கியா என்றால் இல்லை;மேடையா என்றால் இல்லை; மாலையா என்றால் அதுவும் இல்லை; அலங்காரமா என்றால் இல்லை; பொன்னாடையா என்றால் அதுவும் இல்லை. வேறென்ன வேண்டும் ? கூட்டம்தான் தேவை. கூட்டத்துக்கு கூட்டம் தான் முக்கியம்" என்றார்.