பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பிரபல இந்தி நடிகை ரேகா மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். தற்போது மும்பையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மும்பை மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று மருந்து தெளித்து வருகிறார்கள். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அமீர்கான் உள்ளிட்ட அனைத்து சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் வீடுகளுக்கும் சென்று மருந்து தெளித்து வருகிறார்கள்.
பாந்திராவில் உள்ள ரேகா வீட்டுக்கு மாநகராட்சி ஊழியர்கள் மருந்து தெளிக்கச் சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் மாநகராட்சி ஊழியர்களை வீட்டுக்குள் விட மறுத்ததோடு அவமானப்படுத்தியும் அனுப்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி சட்டம் 381(பி), யின் கீழ் நடிகை ரேகாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதற்கு பதில் அளிக்காவிட்டால் போலீஸ் துணையுடன் மாநகராட்சி ஊழியர்கள் ரேகாவின் வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்துவார்கள் என்ற தெரிகிறது.