மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்திய சினிமாவின் பிரமாண்ட படமான பாகுபலி கடந்த ஜூலை 10ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழியில் வெளிவந்தது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடித்திருந்தார்கள். இதனை அர்கா மீடியா சார்பில் கே.ராகவேந்திரராவ், ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி தயாரித்திருந்தார்கள். சுமார் 200 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் 600 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமங்கள் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளுக்கு தனித்தனியாக கோடிக் கணக்கில் விற்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகதீரா, நான் ஈ படங்களை வாங்கிய மழவில் மனோரமா டி.வியே இப்போது மலையாள மொழி பாகுபலியையும் வாங்கியுள்ளது. மற்ற மொழி சேனல்கள் பாகுபலியை தீபாவளிக்கு ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கும் நேரத்தில் மழவில் மனோராமா வருகிற அக்டோபர் 4ந் தேதி ஒளிபரப்புகிறது.
மலையாள மொழி தமிழ், தெலுங்கு, கன்னட ரசிகர்களுக்கு ஓரளவுக்கு புரியும் என்பதால் அன்றைய தினம் தென்னகத்தின் அனைத்து ரசிகர்களும், குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மழவில் மனோரமாவில் பாகுபலியை கண்டு ரசிக்கலாம். தென்னகத்தின் வணிகத்தை கருத்தில் கொண்டே மழவில் மனோரமா பாகுபலியை ஒளிபரப்புவதில் முந்திக் கொண்டுள்ளது.