Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பொன்விழா படம்: விவசாயத்தின் பெருமை பேசிய பழனி

24 செப், 2015 - 16:33 IST
எழுத்தின் அளவு:
Golden-jubliee-film---Sivaji-Ganesans-Pazhani-movie

விவசாய மக்கள் வஞ்சிக்கப்படுவது காலம் காலமாக நடந்து வருகிற ஒன்று. இன்றுகூட அவர்களது விளைநிலங்கள் குறைந்த விலை கொடுத்து அபகரிக்கப்பட்டு அடுக்குமாடி கட்டிடங்களாகவும், ஆலைகளாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் நாயகர்களாக அன்றைய ஹிரோக்கள் நடித்தனர். குறிப்பாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விவசாயி, உழைக்கும் கரங்கள், உரிமைக்குரல் போன்ற படங்களில் விவசாயிகளின் துயர் துடைக்கும் நாயகனாக நடித்தார். சிவாஜி விவசாயிகளில் ஒருவராக நடித்து அவர்களின் வேதனையை புரிய வைத்தார். அப்படி ஒரு படம்தான் பழனி.


1965ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை ஏ.பீம்சிங் இயக்கினார். சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஸ்ரீராம், தேவிகா, புஷ்பலதா, டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, நாகேஷ் நடித்திருந்தார்கள். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார். ஜி.வி.அய்யர் என்பவர் படத்தின் கதையை எழுதியிருந்தார்.


பழனியின் கதை


கிராமத்து அப்பாவி விவசாயி பழனி (சிவாஜி). அவரது தம்பிகள் முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஸ்ரீராம். மனைவியை இழந்த பழனி தம்பிகளுக்காக மறுமணம் செய்து கொள்ளாமல் உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்கிறார். அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். மூத்த தம்பியின் மனைவிக்கு தனிக்குடித்தன ஆசை வந்த பிரிந்து போகிறார். பூமிதான இயக்கம் சிவாஜிக்கு உள்ளூர் பண்ணையாரிடம் வாங்கிக் கொடுத்த நிலத்தை பண்ணையாரே ஏமாற்றி பிடுங்கிக் கொள்கிறார். பிழைக்க வழியின்றி மற்ற தம்பிகள் இருவரும் நகரத்துக்கு சென்று விடுகிறார்கள்.


பழனியின் தங்கை மற்றும் உள்ளூர் பெண் எமிலியை அடைய நினைக்கும் பண்ணையார் அதற்காக கீழ்த்தரமான வேலைகளை செய்கிறார். நகரத்துக்கு பிழைக்கப்போன தம்பிகளில் ஒருவர் சிறைக்குச் செல்கிறார். இப்படி வில்லனால் திசைக்கு ஒருவராக சென்றவர்கள் வில்லனை வென்று எப்படி மீண்டும் ஒன்று சேர்கிறார்கள், தங்கள் நிலத்தை எப்படி மீட்கிறார்கள் என்கிற கதை.


தேசிய விருது


எம்.ஜி.ஆர் விவசாயிகளின் காட்பாதராக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அப்பாவி விவசாயியாக நடித்தார் சிவாஜி. படத்தில் அவருக்கு ஜோடியும் இல்லை. தம்பிகளுக்காகவே வாழ்வார். அவரின் இந்த யதார்த்த நடிப்பும், கூட்டுக்குடும்ப வாழ்க்கையும், நிலச்சுவான்தார்களின் கொடுமையும், பெண்களின் தனிக்குடித்தன ஆசை என அத்தனை விஷயங்களையும் படம் பேசியதால் அனைத்து தரப்பினருக்கும் பிடித்து வெற்றிப் படமானது. அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.


டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா ஆகியோர் கொடூர வில்லன்களாக நடித்திருந்தார்கள். நாகேஷ் வில்லன்களின் ஆளாக இருந்து கொண்டு நியாயம் பேசி சிரிக்க வைத்தார்.


பூமிதான இயக்கம்


அப்போது பிரபலமாக இருந்த விநோபாவின் பூமிதான இயக்கத்தை ஊக்கப்படுத்தியும். பூமிதான இயக்கம் மூலம் பெற்ற நிலங்களும் எப்படி விவசாயிகளிடமிருந்து அபகரிக்கப்படுகிறது என்பதையும் தெளிவாக காட்டிய படம். கிராமத்திலிருந்து நகரத்திற்கு பிழைப்பு தேடிவரும் அப்பாவி மக்கள் படும் துயரத்தையும் பேசியது.


இப்படி அந்தக்கால சினிமா இலக்கணங்களை உடைத்து யதார்த்தமான சமூக வாழ்க்கைக்கான படமாக பழனி அமைந்தது. “ஆறோடும் மண்னில் இன்றும் நீரோடும்...” அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...” என்பது உள்பட அருமையான பாடல்களும் இடம்பெற்ற படம்.


காலத்தை வென்று நிற்கும் படம்


50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படமாக இருந்தாலும் படத்தில் பேசப்பட்ட அண்ணன் தம்பி, உறவு, கூட்டுக்குடும்பம், விவசாய நிலத்தை அதிகார வர்க்கம் பறிப்பது போன்ற விஷயங்கள் இன்றைய காலத்தோடும் பொருந்திப்போவதாக அமைந்துள்ளது. அப்படியே தூசி தட்டி இப்போது வெளியிட்டாலும் எந்த பிசிறும் இல்லாமல் இப்போது நடப்பது போன்ற கதையும் காட்சியுமாகவே படம் இருக்கும். அதுதான் பழனி படத்தின் சிறப்பு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in