தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக ஹீரோயின் தொடர்பான படங்கள் அதிகளவில் வெளிவர தொடங்கியுள்ளன. அதிலும் பாலிவுட் நடிகைகள் போலீஸ் ரோலில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், ராணி முகர்ஜி, ப்ரியங்கா சோப்ரா ஆகியோரை தொடர்ந்து நடிகை கங்கனா ரணாவத்தும் போலீஸ் ரோலில் நடிக்க போகிறார். இயக்குநர் நிகில் அத்வானி இயக்க போகும் புதிய படத்தில் தான் கங்கனா போலீஸ் ரோலில் நடிக்கிறார்.
இதுப்பற்றி, நகில் கூறியுள்ளதாவது... என்னுடைய அடுத்தப்படத்தில் கங்கனா நடிக்கிறார். தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. படத்தில் அந்த ரோலுக்கு ஏற்றபடி கங்கனா, தனது உடல் அமைப்பு மற்றும் குணாதிசயங்களை மாற்ற பயிற்சி எடுக்க போகிறார். இந்தப்படம் ஹாலிவுட்டில் வெளியான தி கேர்ள் வித் டிராகன் டாட்டூ படத்தின் தழுவிய கதை, அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்குகிறது என்று கூறியுள்ளார்.