‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சுண்டாட்டம், பொங்கி எழு மனோகரா போன்ற படங்களில் நடித்த இர்பான் அடுத்து நடித்து வரும் படம் ஆகம். தீக்ஷிதா ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர ஜெயபிரகாஷ், ரியாஸ்கான், ஜெயஸ்ரீ, கனடாவைச் சேர்ந்த அலியோனா நடிக்கிறார்கள். வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம் என்ற புதுமுகம் இயக்குகிறார். இவர் கார்பரேட் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: அடிப்படையில் நான் ஒரு டாக்டர், இருந்தாலும் மனிதவளம் பற்றிய ஆர்வத்தில் அதுபற்றி படித்து அந்தப் பணி செய்து வருகிறேன். என் துறை சார்ந்த தன்னம்பிக்கை நூல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒன்றுதான் ஒரு சிறகு போதும் என்ற புத்தகம். இது இந்தியாவில் வேலைவாய்ப்புக்காக கொடுக்கப்படும் லஞ்சம். அதன் காரணமாக திறமைசாலிகள் வெளிநாட்டுக்கு செல்வது போன்ற விஷயங்களை எழுதினேன். வேலைவாய்ப்பு தொடர்பாக ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி இந்த துறையில் புழங்குகிறது.
இந்த புத்தகத்தை படித்த நண்பர்கள் இதையே திரைக்கதையாக்கி சினிமாவாக எடுத்தால் பலருக்கும் சென்று சேரும் என்றார்கள். இயக்குனர் மோகன்ராஜா எனது நண்பர், அவர் மூலம் கொஞ்சம் சினிமா அனுபவமும் உண்டு. அவரிடம் சொன்னதும் "சினிமாவுக்கான அத்தனை விஷயமும் புத்தகத்தில் இருக்கிறது திரைக்கதையை மட்டும் நன்றாக கொண்டு வந்து விடுங்கள் ஜெயிக்கலாம்" என்றார். இப்போது படமாகி விட்டது. நவம்பர் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். என்கிறார் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.