பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாண்டியநாடு படத்தில் விஷால் பயந்த சுபாவத்துடன் இருப்பார். முதல் காட்சியிலேயே ஒரு சிறு நடிகரிடம் அடி வாங்குவது போல் காட்சி வரும். பாயும்புலி யில் காஜல் மிகவும் பயந்த சுபாவத்துடன் வருகிறார். சாலையில் போகவே பயப்படுவாராம். சாலையில் டூவீலரை திருப்பவே பயப்படுவாராம். கடக்க சொல்ல வேண்டுமா?. அப்படி ஒரு பயம். மிரளும் மானைப் போல ஒரு கேரக்டராம். இந்த பயந்த சுபாவம் பாடலிலும் எதிரொலிக்குமாம்.
வைரமுத்து கூட சாலையின் குறுக்கே கடக்கும் பயந்த பெண்ணைப் பற்றி 'யாரந்த முயல்குட்டி
'யாரந்த முயல்குட்டி, உன் பேரென்ன முயல்குட்டி ? வெள்ளை வெள்ளையாய், வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய், யாரந்த முயல்குட்டி 'என்று காஜலை மனதில் வைத்துத் தான் பாடல் எழுதியிருக்கிறார்.
பாயும்புலியில் 45 நிமிட க்ளைமாக்ஸ்: சுசீந்திரன் நான்மகான் அல்ல படத்தில் 22நிமிடம் பரபரப்பு க்ளைமாக்ஸ் அமைத்து இருப்பார். வசனத்தைவிட காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பார். அதேயோல் பாயும்புலி யில் சுமார் 45 நிமிடங்கள் பரபரப்பு காட்சிகளைத் தோரணமாக்கி க்ளைமாக்ஸ் அமைத்திருக்கிறாராம். அது நிச்சயம் பேசப்படும் என்றும் விஷாலின் வணிக மதிப்பின் உயரம் சில அங்குலமாவது உயரும் என்றும் நம்புகிறார் இயக்குநர் சுசீந்திரன்.