ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ரூ.500 கோடி ரூ.600 கோடி என்று பாலிவுட் படங்கள் மட்டுமே வசூலில் சாதனை படைத்து வந்தநிலையில், தென்னிந்திய படம் ஒன்றும் ரூ.600 கோடி வசூலித்தது பாலிவுட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்தப்படம், சமீபத்தில் ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான பாகுபலி படம் தான். உலகம் முழுக்க சுமார் 4000 தியேட்டர்களில் வெளியான பாகுபலி படம் 50 நாட்களை கடந்து தற்போதும் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் சுமார் ரூ.600 வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியில் மட்டும் சுமார் ரூ.120 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. டப்பிங் படம் ஒன்று இந்தளவு வசூல் பெறுவது இதுவே முதன்முறையாகும்.