டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான நிதின் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். நிதின் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன், வெங்கட் மற்றும் ரேஷ்மா உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ள கொரியர் பாய் கல்யாண் படம் விரைவில் வெளிவரவுள்ளது. நடிகை யாமினி குப்தா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் பிரேம் சாய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் லோபர் படத்தில் நிதின் நாயகனாக நடிக்கக் கூடும் என தகவல் வெளிவந்தது. ஆனால் லோபர் படத்தின் கதைக்கு ஏற்ற உடல்வாகு நிதினுக்கு இல்லை எனக் கூறி பூரி ஜெகன்நாத் வருண் தேஜை அப்படத்தின் நாயகனாக்கினார். தற்போது நிதின், இயக்குநர் கிருஷ்ணா சைதன்யா படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. ரௌடி பெல்லொவ் எனும் படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் கிருஷ்ணா கூறிய கதை நிதினுக்கு பிடித்துவிட்டதாகவும் விரைவில் இப்படத்தில் நிதின் நடிக்கக் கூடும் எனவும் கூறப்படுகின்றது.