அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
மலையாள இயக்குனர், கதாசிரியர் என பன்முகம் கொண்டவரும் பிரபல நடிகருமான சீனிவாசன், கொச்சியில் உள்ள கேன்சர் சென்டரில் நடக்கும் மோசடியை படமாக எடுத்து அம்பலப்படுத்துவேன் என கூறியுள்ளார். அந்த கேன்சர் சென்டரில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வந்தவர்களில் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை என்றும், கேன்சருக்கான மருத்துவம் என்கிற பெயரில் வேறு ஒரு மோசடி நடக்கிறது என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என்றும் கூறியுள்ளார் சீனிவாசன்.
இந்த விவகாரத்தை முதலில் அவர் வெளிப்படுத்தியது கேரள அமைச்சர் கே.பாபுவுடன் கலந்து கொண்ட ஒரு விழா மேடையில் தான்.. அப்போது இதுபற்றிய ஆதாரங்களை ரகசியமாக வைத்திருப்பதாகவும், அரசு தரப்பில் இருந்து நம்பிக்கையான ஒருவர் கேட்டால் கொடுப்பதாகவும் சொன்னார்.. ஆனால் பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அந்த ஆதாரங்கள் அரசிடம், போனால் அப்படியே முடக்கப்பட்டு விடுமோ என்கிற சந்தேகத்தில், இப்போது அதை படமாகவே எடுக்க முடிவுசெய்துவிட்டார் சீனிவாசன்.
உண்மையை வெளியிடாததால், தன்னை கோழை என நினைத்துவிடவேண்டாம் என்றும் நிச்சயமாக தனது படத்தில் அவை அனைத்தும் இடம்பெறும் என்றும், அதுவரை அந்த ரகசியம் காக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ள சீனிவாசன், இந்தப்படம் வெளியாகும்போது மக்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்திப்பார்கள் எனவும் சீனிவாசன் கூறியுள்ளார்.