இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சமீபகாலமாக இசையமைப்பாளர்களும் ஹீரோக்களாக வலம் வரத் தொடங்கிவிட்டனர். விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத், அனிருத், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சிலர் பாடல் காட்சிகளில் நடித்து வருகின்றனர். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா உள்பட பலர் இசை ஆல்பங்களில் நடித்துள்ளனர். இப்படி இசையமைப்பாளர்களும் திரையில் முகம் காட்டி வரும் நிலையில், யுத்தம் செய், முகமூடி, காடு, ஆரோகனம், கிருமி உள்பட பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் கே, கள்ளப்படம் என்ற படத்தில் ஒரு இசையமைப்பாளர் கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால், தொடர்ந்து தான் இசையமைக்கும் படங்களின் இயக்குனர்கள் நடிக்கக் கேட்டுக்கொண்டும் அதை ஏற்க அவர் மறுத்து வருகிறார்.
இதுகுறித்து கே கூறுகையில், கள்ளப்படம் படத்தில் இசையமைப்பாளர் வேடத்திலேயே நடிக்கச் சொன்னதால் நடித்தேன். மற்றபடி தொடர்ந்து நடிக்கும் ஆர்வம் என்னிடம் இல்லை. அதனால்தான் மறுத்து வருகிறேன். அதேசமயம், இசையில் புதுமைகள் செய்ய வேண்டும் என்பதில்தான் எனது முழு ஆர்வமும் உள்ளது. அந்தவகையில், நான் இதுவரை இசையமைத்துள்ள படங்களில் மலையாளத்தில் பஹத்பாசில் நடித்த அன்னயும் ரசூலும் படத்துக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. அந்த படத்தைப்பார்த்துதான் என்னை கிருமி படத்துக்கு புக் பண்ணினர். காரணம் இந்த படத்தில் பின்னணி இசைக்கு அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது. அதனால், கதைக்கும், காட்சிக்கும் ஏற்ப இயல்பான பின்னணி இசையை கொடுத்துள்ளேன் என்று கூறும் கே, இந்த கிருமி படம் தமிழில் எனக்கு திருப்புமுனையாக அமையும் என்கிறார்.