ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக, தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீஸாகும் இரண்டு - மூன்று நாட்களுக்கு முன்னர் அப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்கு பிரச்னைகள் எழுவது வாடிக்கையாகிவிட்டது. அப்படித்தான் தற்போது விஷால் நடித்துள்ள ''பாயும் புலி'' படத்திற்கும் பிரச்னை எழுந்துள்ளது. லிங்கா படம் தொடர்பான பிரச்னை இன்னும் முடிந்தபாடில்லை. லிங்கா படத்தை வெளியிட்ட வேந்தர் மூவிஸ் தான் பாயும் புலி படத்தையும் தயாரித்துள்ளது. லிங்கா படத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை காரணம் காட்டி இப்போது பாயும் புலி படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழ் சினிமாவை அழிக்கும் வேலைகள் நடந்து வருகிறது. பாயும்புலி திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள். தங்களுக்கு ஒரு பெரும்தொகை தரவேண்டும் என்றும், அந்தத் தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார்கள் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர். இதனை கண்டிக்கும் வகையிலும், இதற்கு தீர்வு காணும் விதத்திலும் வருகிற 04.09.2015 முதல் அனைத்துத் திரைப்படங்களும் தமிழகம் முழுவதும் திரையிடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கம் இப்படி அறிவித்துள்ள நிலையில், நாளை(செப் 4ம் தேதி) பாயும் புலி, போக்கிரி மன்னன் மற்றும் சவாலே சமாளி ஆகிய மூன்று படங்களும் வெளியாக இருக்கிறது. விஷால், கண்டிப்பாக நாளை படம் வெளியாகும் என்று கூறியுள்ளார். அதேப்போல் போக்கிரி மன்னன் படக்குழு மற்றும் சவாலே சமாளி படக்குழுவும் நாளை தங்களது படங்கள் கண்டிப்பாக வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
இதுதவிர்த்து தயாரிப்பாளர் சங்கம், சம்பந்தப்பட்ட படக்குழு, விநியோகஸ்தர்கள் என்று மாறி மாறி ஒரு பக்கம் பேட்டி கொடுத்து வருகின்றனர். இவையெல்லாம் திரையுலகினர் மத்தியில் ஒற்றுமை இல்லாதையே வெளிப்படுத்துகிறது. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, தங்களது பிரச்னைகளை உட்கார்ந்து பேசி தீர்க்காமல் ஆளாளுக்கு மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் ஒருமுடிவு எட்டப்படவில்லை.
இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது நாளைய படங்கள் சொன்னபடி ரிலீஸாகுமா என்பதே சந்தேகமாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்...!