இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கவியரசர் கண்ணதாசன் மீது மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்டவர். கடந்த 2004ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன்-விஸ்நாதன் அறக்கட்டளையை தொடங்கினார். கண்ணதாசன் புகழ் பரப்ப தோற்றுவிக்கப்பட்ட இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் கவியரசு விழாவை நடத்தி வந்தார்.
தற்போது எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்து விட்டதால் அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அறக்கட்டளை நிர்வாகிகளின் கூட்டம் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. இதில் புதிய தலைவராக இலக்கியவாதி ப.லெட்சுமணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எஸ்.விஸ்வநாதன் நிறுவனத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
செயலாளராக ஏவிஎம்.சரவணன், இணை செயலாளர்களாக எம்.ரவிச்சந்திரன், பொருளாளராக எஸ்.பி.முத்துராமன், அறங்காவலர்களாக எம்.ஏ.எம்.ராமசாமி, நல்லி குப்புசாமி, வள்ளி அழகப்பன், எம்.முரளி, எம்.கே.மணி, டி.ராமலிங்கம், எஸ்.கண்ணன் ஆகியோர் தொடர்ந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு கவியரசு விழாவை அக்டோபர் 17ந் தேதி ராஜா அண்ணாமலைபுரம் ராஜா முத்தையா அரங்கில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.