தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூதுகவ்வும், பீட்சா-2, தெகிடி ஆகிய படங்களில் நடித்தவர் அசோக்செல்வன். இதில் அவர் நாயகனாக நடித்த தெகிடி படம் பெரிதாக ஓடவில்லை. என்றாலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. வெயிட்டான பர்பாமென்ஸ் கொடுக்கக்கூடியவர் என்கிற பெயரை பெற்றார். விளைவு, அதையடுத்து, சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருவன், வரைபடம், 144, பிறைதேடிய நாட்கள் என பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டானார்.
இந்த நிலையில், தற்போது அமலாபால் தயாரிப்பில் பிரியதர்ஷன் இயக்கும் சில நேரங்களில் படத்திலும் நாயகனாக நடிக்கிறார் அசோக்செல்வன். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றபோது, பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகிய இருவரும்தான் இப்படத்தின் பிரதான வேடத்தில் நடிப்பதாக சொன்னார்கள். ஆனால் அந்த படத்தில் பிரபுதேவாவும் தயாரிப்பாளரான பிறகு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாம்.
மேலும், பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் 3 படங்களை தயாரிப்பதாக அறிவித்த பிரபுதேவா, இதில் இரண்டு படங்களில் டி.இமான் இசையமைப்பதாக சொன்னார். ஆனால் அமலாபாலுடன் இணைந்து தயாரிக்கும் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை அப்போது சொல்லவில்லை. இந்நிலையில், இப்போது பிரியதர்ஷன் இயக்கும் அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்க வைக்கும் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. ஆக, பிரியதர்ஷன், ஏ.ஆர்.ரகுமான், பிரகாஷ்ராஜ் என பல ஜாம்பவான்கள் இணைந்துள்ள படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாகியிருக்கிறார்.