'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
போகிற போக்கைப் பார்த்தால் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படமும் 'வாலு' போல நீண்டு கொண்டே போகும் போலத்தான் தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு 'இது நம்ம ஆளு' படம் ஆரம்பமான போது சிம்புவிடம் போய் சிக்குகிறாரே பாண்டிராஜ் என நினைத்தவர்கள்தான் அதிகம். அதையெல்லாம் மாற்றிக் காட்டுகிறேன் என சவால் விடாத குறையாக சிம்புவை வைத்து படம் இயக்க ஆரம்பித்தவர்தான் பாண்டிராஜ். ஒரு கட்டத்தில்தான் சிம்புவை மாற்றவே முடியாது என அவர் உணர்ந்து கொண்டார். எப்படியோ ஒரு வழியாக படத்தை முடித்துவிட்டார் பாண்டிராஜ்.
ஆனால், விட்ட குறை தொட்ட குறையாக படம் எப்போது வெளிவரும் என்றுதான் யாருக்கும் தெரியவில்லை. நயன்தாரா படத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்தே ஆக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வரை புகாருடன் சென்று விட்டார் படத்தின் தயாரிப்பாளரான டி.ஆர். இதற்கும் சிம்புவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வேறு அவர் சொல்கிறார். ஆனால், படத்தின் இத்தனை தாமதத்திற்கும் காரணம் சிம்புதான் என்பது அவருக்குத் தெரியாதா என்ன ?. இருந்தாலும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து நயன்தாரா நடித்தே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அந்தப் பிரச்சனை முடிந்து, படப்பிடிப்பு நடத்தி, படத்தை வெளியிட்டு முடிப்பதற்குள் 'ஆளு', 'வாலு' வாக மாறாமல் இருந்தால் சரி என சிம்பு ரசிகர்களே அலுத்துக் கொள்கிறார்கள்.