'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
இன்றைக்கு சின்னத்திரைகளில் புற்றீசல்கள் போன்று தொகுப்பாளினிகள் ஏராளமானோர் படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி வருபவர்களில் சிலர் புகழ் பெற்றாலும் பலர் காணாமல் போய்க்கொண்டும் உள்ளனர். ஆனால் இப்படி வந்தவர்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து பல ஆண்டுகளாக நிலைத்து நின்று கொண்டிருப்பவர் டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி மட்டுமே.
அவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக வந்தபோதும், சினிமா பிரபலங்களை பேட்டி கண்டு வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சிதான் திவ்யதர்ஷினியை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம், பிரபலங்களின் ஜாலி அரட்டையாக அந்த நிகழ்ச்சி அமைந்ததுதான். அதற்கேற்ப அவர்களிடம் பேச்சுக்கொடுத்து சூடான விசயங்களைகூட சுவையான விவாதமாக மாற்றிக்காட்டினார் டிடி. அதனால் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் அவர் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட திவ்யதர்ஷினி, தனது நிகழ்ச்சியில் பங்கேற்ற பல நடிகர் நடிகைகளிடம் நெருக்கமான நட்பு வளர்த்து வருகிறார். அதில் பல நடிகர்களை தனது அண்ணன்களாகவே அவர் நினைக்கிறாராம். அதனால் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு ராக்கி கட்டி விட்டு அண்ணன்களாக்கி வரும் அவர், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் கையில் அடுத்தபடியாக ராக்கி கட்டி விடவும் சரியான நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.