விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில்தான் சோனியா அகர்வால் என்ற சண்டிகர் நடிகை அறிமுகமானார். இவரையே அதன்பிறகு திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு சோனியா அகர்வால் இன்னும் மறுமணம் செய்யவில்லை. ஆனால் செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், ஏற்கனவே செல்வராகவன் இயக்குவதாக இருந்து கைவிடப்பட்ட மாலை நேரத்து மயக்கம் என்ற டைட்டீலில் புதிய கதையொன்றை ரெடி பண்ணி அந்த படத்தை இயக்கி வருகிறார் கீதாஞ்சலி. மனைவிக்கு முதல் படம் என்பதால் தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் செல்வராகவனும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த மாலை நேரத்து மயக்கம் படத்தில் பாலகிருஷ்ணன் என்ற புதுமுக நடிகர் நடிக்க, அவருக்கு ஜோடியாக வாமிகா ஹாப்பி என்கிற சண்டிகர் நடிகை நடிக்கிறார். இவர் இந்தி, பஞ்சாபியில் பல படங்களில் நடித்தவர். அவரது கால்சீட் பிரச்சினையினால்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு பலதடவை தள்ளி வைக்கப்பட்டு தற்போது இறுதிகட்டத்தை படம் எட்டியிருக்கிறது. மேலும், செல்வராகவனின் முதல் படத்தில் சண்டிகரைச்சேர்ந்த சோனியா அகர்வால் நாயகியாக நடித்தது போன்று கீதாஞ்சலி இயக்கும் முதல் படத்திலும் வாமிகா ஹாப்பி இன்னொரு சண்டிகர் நடிகையே நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.